இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை!

Sunday, September 11th, 2016

இலங்கை பிரஜைகளைத் திருமணம் செய்த வெளிநாட்டவருக்கு நிரந்தர விதிவிட உரிமை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நகர்வு ஊடாக இலங்கை பிரஜைகளை திருமணம் செய்த வெளிநாட்டவர்கள் இலங்கையில் குடியேறுவதை ஊக்குவிப்பதன் மூலம் முதலீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அது குறித்து வெளிநாட்டு அமைச்சு மற்றும் நிதி அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

s.b.nawinna-mp-720x480

Related posts: