ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 32 ஆம் ஆண்டு நினைவு நினம் அனுஸ்டிப்பு!
Tuesday, May 8th, 2018
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினத்தின் 32 ஆம் ஆண்டு நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வும் பொதுக்கூட்டமும் கோண்டாவில் பகுதியில் இடம் பெற்றது.
சிறிசபாரட்டணம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடமான கோண்டாவில் பகுதியில் உள்ள அன்னுங்கை என்னும் இடத்தில் குறித்த அஞ்சலி மரியாதை நிகழ்வு நடைபெற்றது.
இதன்பொது ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவரது நினைவுகளும் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கலாச்சார விழுமியங்களை மதிக்கத்தக்கவர்களாக எமது சிறார்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின...
தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!
அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தம்!
|
|
|


