ரயில் மற்றும் பஸ் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை!
Tuesday, April 17th, 2018இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் மற்றும் ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது.
பயணிகள் இந்த டச் அட்டையை கொள்வனவு செய்ய முடிவதுடன் பஸ் அல்லது ரயில்களில் பயணிக்கும் பொழுது பயண கட்டணம் இந்த அட்டையில் குறைத்துக் கொள்ளப்படும்.
இலங்கை மத்திய வங்கியும் போக்குவரத்து ஆணைக்குழுவும் திறைசேரியும் இலங்கை பேய் (Pay) நிறுவனமும் ஒன்றிணைந்து குறித்த அட்டையை தயார் செய்வதாக தேசிய போக்குவரத்துஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜி.பி.ஹேமசந்திர தெரிவித்தார்.
குறித்த இலத்திரனியல் அட்டை முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் பயணிகளுக்கு மிகுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் பிரச்சினையை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
குடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் சங்கிலியன் தோ...
தெரிவுக்குழு முன்னிலையில் பொய்யான தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை!
ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிர்மாணம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|