ரயில்வே பணிப் பகிஷ்கரிப்பு தொடர்பில் சட்டநடவடிக்கை – அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!

Monday, June 24th, 2019

அசாதாரண முறையில் மேற்கொள்ளப்படும் ரயில்வே பணி பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா – யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயேஅமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

48 மணிநேரங்களாக முன்னெடுக்கப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் 22 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: