யாழ். மாவட்ட விருப்பு வாக்கு விபரம் அறிவிப்பு!

Friday, August 7th, 2020

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது யாழ். மாவட்ட இறுதி முடிவுகளின் விருப்பு வாக்கு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தவானந்தா 32,146 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்க 7 ஆவது தடவையாகவும் தமிழ் மக்களால் தமது பிரதிநிதியாக நாடாளுமன்றம் அனுப்பப்பட்டுள்ளார்.
அத்துடன் யாழ் மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 7 ஆசனங்களுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அங்கஜன் இராமநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், சி.சிறிதரன் 35,884 வாக்குகளையும், எம்.ஏ.சுமந்திரன் 27,834 வாக்களையும், த.சித்தார்த்தன் 23,840 வாக்குகளையும், சசிகலா 23,098 வாக்குகளையும், மாவை சேனாதிராசா 20,292 வாக்குகளையும், ஈ.சரவணபவன் 20,358 வாக்குகளையும், பா.கஜதீபன் 19,058 வாக்குகளையும், இ.ஆனல்ட் 15,386 வாக்குகளையும், கு.சுரேந்திரன் 10,917 வாக்குகளையும், வே.தவேந்திரன் 5,952 வாக்குகளையும் பெற்றனர்.
மேலும், அங்கஜன் இராமநாதன் 36,356 வாக்குகளையும், டக்ளஸ் தேவானந்தா 32,146 வாக்குகளையும், கஜேந்திரகுமார் 31,658 வாக்குகளையும், க.வி.விக்னேஸ்வரன் 21,554 வாக்குகளை பெற்றனர்.

Related posts:

உரிமை கோரப்படாத நிலையில் யாழ். பொலிஸாரால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள சான்றுப்...
20 ஆவது திருத்தம்: 21, 22 ஆம் திகதிகளில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் - பாராளுமன்ற பிரதி செயலாளர்...
68 வீதமான பாடசாலை சீருடைத் துணிகள் வலய அலுவலகங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன - இராஜாங்க அமைச்சரா...

வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு - சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை!
ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் - சகல ஊடக நிறுவனங்களுக்கும் அரசின் அறிவிப்பு!
இலங்கை வங்குரோத்து நிலையில் இல்லை - 5.5% பொருளாதார வளர்ச்சி மட்டத்தை அடைகிறது - மத்திய வங்கி ஆளுநர...