யாழ். மாவட்டத் தொண்டராசிரியர்களின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு!

Wednesday, March 29th, 2017

யாழ். மாவட்டத் தொண்டராசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனம் கோரி இன்று புதன்கிழமை(29) வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியுள்ளனர்.

ஒன்றுகூடிய தொண்டராசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்துவதற்கு முயன்ற போது வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தொண்டராசிரியர்களின் பிரதிநிதிகளைத் தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது வடமாகாணத் தொண்டராசிரியர்களுக்கான நியமனம் வழங்குவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சருடனும், அமைச்சர் சுவாமிநாதனுடனும் கலந்துரையாடியுள்ளேன். தொண்டராசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை என்னால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார். எனினும், நியமனம் எப்போது வழங்கப்படும் என வடமாகாண ஆளுநரால் உறுதிமொழிகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆளுநரைச் சந்தித்த பின் யாழ். மாவட்டத் தொண்டராசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய சந்திப்பு திருப்திகரமானதாக அமையவில்லை என்றனர்.

Related posts: