யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 55 பேர் உயிரிழப்பு!

Sunday, June 13th, 2021

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சை விடுதியில், சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையினைச் சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலத்தை சுகாதார விதிமுறைகளுக்கு அமையவாக கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  பெண்ணொருவரும் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது உடலினையும் தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் இதுவரை 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: