யாழ் மாவட்டத்தில் ஐந்து குழந்தைகளும் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Wednesday, June 9th, 2021

யாழ்ப்பாணத்தில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட, பிறந்து 12 நாட்களேயான குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாட்களேயான குருநகர் பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றுக்கும் அதன் தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், முதிராக் குழந்தைகளுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 நாட்களேயான குழந்தை ஒன்றுக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இளவாலைப் பகுதியை சேர்ந்த 9 மாதக் குழந்தை ஒன்றுக்கும் மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த 10 மாதக் குழந்தைக்கும் அதனது பெற்றோருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: