பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை புலம்பெயர் சமூகத்தினர் நடத்திய விதம் கவலையளிக்கின்றது – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, November 22nd, 2021

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த போது புலம்பெயர் சமூகத்தின் அவர்களை நடத்திய விதம் கவலையளிக்கின்றது என அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்  மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையிலேய அமைச்சர் நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

மேலும் ஐக்கியம் மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய வழிகளின் மூலமே நாடு முன்னோக்கி நகர முடியும் என்பதனை புலம்பெயர் சமூகங்கள் புரிந்து கொள்ளும் என நம்புவதாகவும் தெரிவித்திருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ச பிரிவிணையின் ஊடாக எதனையும் அடைய முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த போது புலம்பெயர் சமூகத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர்களை நடத்திய விதம் கவலையளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: