யாழ். மாவட்டத்தில் ஐந்து சமுர்த்தி வங்கிகளுக்கு விருது!

Monday, May 15th, 2017

யாழ். மாவட்டத்தில் ஐந்து சமுர்த்தி வங்கிகளுக்கு ‘ஏ’ தர விருதுகள் கிடைத்துள்ளன. சமுர்த்தி வங்கி அபிவிருத்தித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலுக்கமைவாகவே இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, சுன்னாகம் சமுர்த்தி வங்கி, இணுவில் சமுர்த்தி வங்கி, நெல்லியடி சமுர்த்தி வங்கி, உடுப்பிட்டி சமுர்த்தி வங்கி , பருத்தித்துறை சமுர்த்தி வங்கி  ஆகிய சமுர்த்தி வங்கிகளே குறித்த விருதினைப் பெற்றுள்ளன.

Related posts: