யாழ்.பேருந்து நிலைய காணி போதனா வைத்தியசாலைக்காக சுவீகரிக்கப்படப் போகிறது ஜனாதிபதியின் செயலாளர் யாழ்.மாவட்டச் செயலருக்கு கடிதம்!

Wednesday, January 11th, 2017

யாழ்.போதனா வைத்தியாசலையின் விரிவாக்கத்துக்கு யாழ்.மையப் பேருந்து நிலையக் காணியைச் சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலரினால் மாவட்டச் செயலகத்துக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்து

யாழ்.போதனா வைத்தியாலையின் விரிவாக்கத்துக்கு யாழ்.மையப் பேருந்து நிலையம் மற்றும் வைத்தியசாலைக்கும் மையப் பேருந்து நிலையத்துக்கும் இடைப்பட்ட காணி என்பவற்றை பெற்றுத்தருமாறு யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினால் ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுளளது ஜனாதிபதியின் செயலரால் வைத்தியசாலை விரிவாக்கத்துக்குச் தேவையான காணிகளைச் சுவீகரித்து அதனைப் பெற்றுக் கொடுப்பதறகு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு யாழ். மாவட்டச் செயலகத்துக்ககடிதம் அனுப்பிவைககப்பட்டுள்து.

இந்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படடவுள்ளதாகத் தெரியவருகிறது.  யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய பிரிவுகளை நகருக்கு வெளிய கொண்டு செல்ல வேண்டும் என்று தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ்.நகரின் மையப் பகுதியில் வைத்தியசாலை விரிவாக்கத்துக்கு காணி கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

43395786

Related posts:

திருமலையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமாயின் தலைமை மாற்றத்தை உருவாக்க வேண்டும் – ஈ....
கொரோனா சிகிச்சைக்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை - உள்நாட்டு மருத்துவ ஊக்குவி...
13 ஆவது திருத்த அமுலாக்கம் முடங்கியதற்கு தமிழ்க்கூட்டமைப்பே காரணம் - சாடுகிறார் அமைச்சர் ஜீ.எல் பீரி...

இயற்கை இடரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்க யாழ்.மாவட்டச் செயலகத்தினாலும்  நிவாரணப் பொருட்கள...
இந்திய அரசாங்கத்தின் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ்.பொதுநூலகத்திற்கு அருகில் கலாசார மையம்:  பணிகளை ...
ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுங்கள் – சுகாத...