யாழ். பல்கலையின்  கலைப்பீட கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

Sunday, March 12th, 2017

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத் துறை தவிர்ந்த ஏனைய கலைப்பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள குறித்த கலைப்பீட மாணவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாகவும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி கலைப்பீட பீடாதிபதி, பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் வாய்மூலமாகவும், எழுத்து மூலமாகவும், விளக்கமான பணிப்புரைகளை அறியத்தந்திருந்தும் அவற்றை உதாசீனம் செய்து வரவேற்பு உபசார நிகழ்வினை நடத்தியமைக்காக  யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒழுக்க விதிமுறைகளை மீறிய மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் யாழ் பல்கலைக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts: