யாழ். பல்கலைக்கழகம் வருகின்றார் ஜனாதிபதி!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் நீர் வடிகட்டியை எதிர்வரும் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆண் மாணவர்கள் விடுதியில் போதிய நீர் வடிகட்டிகள் இன்மையால், குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதாக மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் ஜனாதிபதிக்கும் சுட்டிக்காட்டி கடந்த மாதம் எழுத்துமூல கோரிக்கையை விடுத்தனர்.
இந்தநிலையில் மாணவர்களின் குடிதண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் பிரகாரம் பல்கலைக்கழக மாணவர் வளாகத்தில் ஒரு பெரிய நீர்வடிகட்டியை அமைக்க ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்தது. அந்த நீர்வடிகட்டியை இரு வாரத்தினுள் உடனடியாக அமைக்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டனர். அதனை ஜனாதிபதி எதிர்வரும் 2ஆம் திகதி திறந்துவைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|