யாழ் நகரில் தேசிய அடையாள அட்டை நடைமுறை இறுக்கமாகக் கடைப்பிடிப்பு – பலர் எச்சரிக்கப்பட்டபின் பொலிஸாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்!

Thursday, April 30th, 2020

ஊரடங்கு தளர்த்தப்படும் வேளை மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க செயற்திட்டம் யாழ் மாநகரில் இன்று கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இன்று வியாழக்கிழமை என்பதால் அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 7 மற்றும் 8 ஆகியவற்றைக் கொண்டவர்கள் மட்டும் யாழ்ப்பாணம் நகரின் மத்திக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் ஏனையோர் நகரின் மத்திக்குள் செல்ல அனுமதிக்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: