தெல்லிப்பழையில்  இந்திய அரசின் அனுசரணையில் திறந்து வைக்கப்பட்ட அலுமினியத்  தொழிற்சாலை!

Sunday, August 14th, 2016

இந்தியத் தனியார் முதலீட்டு நிறுவனமொன்று இந்திய அரசின் அனுசரணையில் அலுமினியத் தொழிற்சாலையொன்றை   தெல்லிப்பழை அம்பனையில் நேற்று – 13ஆம் திகதி  திறந்து வைத்துள்ளது.

பிரபல இந்திய, இலங்கை கம்பனிகளின் இயக்குனர் தி.தில்லைராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண சபை ஆளுனர் ரெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அலுமினியத் தொழிற்சாலையைச் சம்பிராதயபூர்வமாகத்  திறந்து வைத்தார்.

இந் நிகழ்வுக்கு யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜன் உள்ளிட்ட பலர்  சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

Related posts: