யாழ்.சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் வைபவரீதியாக திறந்துவைப்பு!
Sunday, January 10th, 2021
யாழ்.சிறைச்சாலை வளாக விருந்தினர் விடுதி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த விடுதியானது நேற்று இரவு, சம்பிரதாயபூர்வமாக, சிறைச்சாலைகள் ஆணையாளரால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
யாழ்.லகூன்’ என்ன பெயரிடப்பட்டுள்ள குறித்த விருந்தினர் விடுதி, ஏனைய சிறைச்சாலைகளிலுள்ள சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும்போது குறித்த விடுதியினை பயன்படுத்த முடியும் என யாழ்ப்பாண சிறைச்சாலையின் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உப்புல் தெனிய, யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகர் மொகான் கருணாரட்ன மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போதைப்பொருள் கடத்தல் வர்த்தகம் தொடர்பில் புதியதொரு அச்சுறுத்தல்!
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரச உத்தியோகஸ்த்தர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி!
யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது -...
|
|
|


