யாழ்.குருநகர் பகுதியில் கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது !
Sunday, September 20th, 2020யாழ்ப்பாண பகுதியில், கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடைப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் குருநகர் பகுதி வீடு ஒன்றினை சோதனையிட்ட போது அங்கே நான்கு கடல் ஆமைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் அந்த வீட்டில் இருந்த குருநகர் பகுதியை சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு 4 கடல் ஆமையின் பாகங்களும் விற்பனைக்கு தயாராக இருந்த இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கடல் ஆமை இறைச்சி மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார்கள்.
Related posts:
கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் வெளிவாரிப் பட்டப் படிப்பிற்களுக்கான பதிவுகளை மேற்கொண்டிருப்பவர்க...
குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நாளை விடுமுறை!
கடமைக்கு சமுகமளிக்காவிடின் விடுமுறையாக கருதப்படும் - ஆசிரியர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள விசேட செயல...
|
|