யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று மின்தடை!

Monday, October 3rd, 2016

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்கடலில் இன்று திங்கட்கிழமை(03) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண  மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் படி, தெல்லிப்பழை டச்சு வீதி, வறுத்தலை விளான், அச்செழு, காங்கேசன் துறை 5 ஆவது பொறியியல் படை முகாம், காங்கேசன் துறை வடக்கு கடற்படை முகாம், பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம்,  பலாலி விமானப் படை முகாம், பலாலி விமானப் படை ஓய்வு கால விடுதி,  மயிலிட்டி கரிசன் 5 ஆவது பொறியியல் படை முகாம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1-Copy5-620x336 (1)

Related posts: