யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
Friday, June 24th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(25-06-2016) காலை-8.30 மணி முதல் மாலை-5.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி நாளை மேற்குறிப்பிட்ட நேரத்தில் தெல்லிப்பழை வைத்தியசாலை, தெல்லிப்பழைப் புற்றுநோய் வைத்தியசாலை, குப்பிளான் , மயிலங்காடு, கல்வியங்காடு இலங்கை நாயகி கோவிலடி போன்ற இடங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது.
அத்துடன் கிளிநொச்சியின் சில பிரதேசங்களிலும் நாளை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இதுவரை 3821 முறைப்பாடுகள் - தேர்தல் ஆணைக்குழு!
இந்தியா மீதான தடையை நீக்கும் ஐக்கியர அரபு அமீரகம்!
தூதரகங்களின் ஆதரவுடன் இலங்கை அபிவிருத்தி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு தகுதியான முதலீட்டாளர்களை ஊ...
|
|