யாழ். கர்ப்பிணிப் பெண் படுகொலையில் திடீர் திருப்பம்!
Thursday, May 17th, 2018ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்க யாழ்.மேல் நீதிமன்றம்கட்டளை வழங்கியுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சகோதரர்களான சந்தேகநபர்களுக்கு பிணை கோரி அவர்களின் தாயார் சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக பிணை விண்ணப்பம்செய்தார். இதனை ஆராய்ந்த நீதிபதி இளஞ்செழியன் இருவருக்கும் நிபந்தனையுடனான பிணை வழங்கி கட்டளை பிறப்பித்தார்.
“சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வைப்புச் செய்ய வேண்டும். அத்துடன் ஒவ்வொருவரும் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள்பிணைகளை நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டும்.
மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும்மற்றும் வெளிநாடு செல்லத் தடை” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளை வழங்கினார்.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஊர்காவற்துறை பகுதியில் ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான 27 வயதுடைய ஹம்சிகா என்பவர் கொலைசெய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் சகோதரர்களான இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|