சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Friday, April 2nd, 2021

சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

முன்பதாக கடந்த வருடம் நீடிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலமானது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முடிவடைவடைந்துள்ளது.

இந்நிலையிலேயே, ஏப்ரல் 1 ஆம் திகதிமுதல் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதிவரை அதாவது சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை 6 மாதங்களால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாகச் சாரதி அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறைகள் இரத்து - 5 ஆயிரத்து 500 பேருந்துகள் நாளைமுதல...
பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டத்திட்டம் ஆரம்பம் -...
சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் - காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறு...