யாழ் .ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண் படுகொலை: சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு !
Wednesday, February 15th, 2017யாழ் .ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண் ந. ஹம்சிகா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சிகளிடம் யாழ்.ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.றியாழ் முன்னிலையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(14) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம்-24 ஆம் திகதி நான்கு வயதேயான பெண் குழந்தையின் தாயான ந. ஹம்சிகா என்ற இளம் குடும்பப் பெண்மணி அவரது வீட்டில் தனித்திருந்த போது கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவத்தை நேரில் பார்த்த முக்கிய சாட்சியான வாய்பேச முடியாத சிறுவன், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் உட்பட ஐவரிடம் இதன் போது தனித்தனியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீர்வு தள்ளிப்போகுமானால் போராட்டம் வேறுவடிவில் திசைதிரும்பும் - பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை!
11 ஆயிரத்து 86 அபாயகர வெடிப்பொருட்கள் வடக்கில் இருந்து அகற்றல் - ஸார்ப் நிறுவனம்!
வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படும் - இராணுவ தளபதி நம்பிக்கை!
|
|