இணையத்தளங்கள் தொடர்பில்பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை!
Wednesday, April 1st, 2020
இணையத்தளம் வாயிலாக சமூகத்திற்கு ஆரோக்கியமற்ற கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் கொரோனாவை இல்லதொழிக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் காவல் துறை மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய அரச உத்தியோகத்தர்களின் சிறிய குறைப்பாடுகளை அடையாப்படுத்தி அவர்களை நிந்திப்பதும், போலியான கருத்துக்களை வெளியிடுவதும், சமூகத்திற்கு ஆரோக்கியமற்ற காணொளிகளை பதிவேற்றம் செயயும் நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் பதில் காவல் துறை மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
Related posts:
யாழ் குடா நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு - எரிபொருளுக்கு அலைமோதிய மக்கள்
ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் சேதம்!
தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான விசாரணை மே மாதத்துக்கு ஒத்திவைப்பு! ......
|
|
|


