ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் சேதம்!
Friday, March 4th, 2022உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையமான ஜபோரிஜியா தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளியாகின்றன.
அணுமின்நிலைய கட்டிடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் எறிகணை தாக்குதல் காரணமாக அணுமின்நிலையம் தீப்பிடித்துள்ளது என எனர்ஹொடரின் மேயர் டிமிட்ரோவ் ஓர்லோவ் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பகுதியில் உள்ள நகரத்திற்கு வெளியே கடுமையான மோதல்கள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
ரஷ்ய படையினர் டாங்கிகளின் உதவியுடன் நகரத்திற்குள் நுழைவதற்கும் அணுமின் நிலையத்தை கைப்பற்றுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் பொதுமக்கள் அணுமின்நிலையத்திற்கு அருகிலும் நகரத்தின் பல பகுதிகளிலும் கொங்கிறீட் தடுப்புகளை அமைத்து போரிட்டு வருகின்றனர். இதனிடையே உக்ரைனில் நான்கு அணுமின்நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவர்களின் மாதாந்த போசாக்கு கொடுப்பனவு அதிகரிப்பு!
உலகளவில் 42 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை - 14 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் அத...
அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைக்க நடவடிக்கை ...
|
|