யாழ் – இந்திய துணைத் தூதுவர் – யாழ் மாவட்ட விமானப்படையின் கட்டளை தளபதி சந்திப்பு!.
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், யாழ்ப்பாண விமானப்படையின் கட்டளை தளபதி குரூப் கப்டன் சமிந்த ஹேரத் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்றையதினம் (01) இடம்பெற்றது.
இதில் யாழ்ப்பாண விமானப்படையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பொதுமக்களுக்கு செயலாற்றக்கூடிய வகையிலான உதவித் திட்டங்கள், பரஸ்பர உதவித்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
இச் சந்திப்பில் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரி ராம் மகேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
000
Related posts:
இலங்கையில் 11 ஆவது கொரோனா தொற்றாளர் மரணம் பதிவானது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
பற்தூரிகை மற்றும் கார்பன் பேனைகளை மீள்சுழற்சி செய்ய விசேட நடவடிக்கை - சுற்றாடல் அமைச்சு அறிவிப்பு!
நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட...
|
|
|


