யாழ்ப்பாண மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!
Wednesday, June 7th, 2023
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 10.06.2023 சனிக்கிழமை தொடக்கம் தினமும் காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை பணம் செலுத்தும் பகுதி திறந்து இருக்கும் என பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்!
பதவி விலகுகிறார் மஹிந்த!
மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர அரச துறையில் எந்தவொரு வேலைக்கும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது...
|
|
|


