யாழ்ப்பாணம் நடைபெற்ற தேர்தல் ஒத்திகை!

Sunday, June 14th, 2020

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான தேர்தல் ஒத்திகை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்த மாதிரி வாக்களிப்பு மதியம் 12 மணிக்கு நிறைவுற்றது.

இந்த ஒத்திகை நிகழ்வில் தேர்தல் ஆணையாளர் நாயகம், யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், பிரதேச செயலர், சுகாதார அதிகாரிகள், பொலிசார் என பலரும் கலந்து கொண்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்றையதினம் யாழ்ப்பாணம், பதுளை, புத்தளம், களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை மையப்படுத்தி தேர்தல் ஒத்திகை இடம்பெறது. சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய வாக்களிப்பை நடத்துவது குறித்து விளக்கமளிப்பதற்காகவே இந்த தேர்தல் ஒத்திகை இடம்பெற்றது

இதேவேளை, நேற்றையதினம் நுவரெலியா, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, மாத்தறை, பொலனறுவை, உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் ஒத்திகை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: