யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவருக்கு துன்புறுத்தல் – உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு!

Friday, December 8th, 2023

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக , பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றையதினம் வியாழக்கிழமை பார்வையிட சென்ற போது , சிறைக்காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாக தம்மிடம் முறையிட்டு அழுததாக உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.  அது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

இலங்கையில் 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் பாதுகாப்பு தொடர...
பொதுச் சேவையை வினைத்திறனாக்குவதற்காக அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்ட தொலைபேசிகளில் 4...