யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவருக்கு துன்புறுத்தல் – உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு!
Friday, December 8th, 2023
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக , பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றையதினம் வியாழக்கிழமை பார்வையிட சென்ற போது , சிறைக்காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாக தம்மிடம் முறையிட்டு அழுததாக உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர். அது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஆபத்தை விளைவிக்கக்கூடிய செத்தல் மிளகாய்: மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
தேர்தலை நடத்துவது குறித்த சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விஷட கலந்துரையாடல்!
யாழ் மாநகரின் ஆளுகைக்குள் உள்ள குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படு, கழிவுநீர் வாங்க்கால்கள் அனைத்தும் பா...
|
|
|


