யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் மிரட்டுகிறது கொரோனா – தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Thursday, April 8th, 2021

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு 1003 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் குறித்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் 88 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தொற்றாளர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தள்ள மாகாண சுகாதார பணிப்பாளர்  இதன்மூலம் கடந்த 14 நாள்களில் யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதிகளைச் சேர்ந்த 87 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: