யாழ்ப்பாணத்து ஆசிரியர் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்பு!

Friday, March 22nd, 2019

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கண்டியில் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.ஜெகசுதன் எனும் ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த ஆசிரியர் சில வருடங்களுக்கு முன்பிருந்து கண்டியில் உள்ள முஸ்லீம் மகாவித்தியாலயம் ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்றைய தினம் பாடசாலைக்கு வராததால் அவரின் நண்பரான மன்னாரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவரை தேடி அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பாடசாலை சமூகத்துக்கு தகவல் அறிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளின் பின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பின்னர், சடலம் தற்போது யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: