யாழ்ப்பாணத்தில் 14 சுகாதார பிரிவுகள் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டள்ளது – ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021

யாழ்ப்பாணத்தில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அபாய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 11 ஆயிரத்து 529 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், 314 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில், கடந்த 14 நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அபாய பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, யாழ்ப்பாணத்தில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், முல்லைத்தீவில் 5 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், கிளிநொச்சியில் 4 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், மன்னாரில் 4 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், வவுனியாவில் 3 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், மட்டக்களப்பில் 13 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், அம்பாறையில் 7 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், திருகோணமலையில் 8 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், அநுராதபுரத்தில் 19 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், கம்பஹாவில் 15 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், களுத்துறையில் 15 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், குருநாகலில் 23 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், புத்தளத்தில் 13 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், கண்டியில் 23 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், மாத்தளையில் 12 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், நுவரெலியாவில் 13 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், கேகாலையில் 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், இரத்தினபுரியில் 17 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், பொலநறுவையில் 8, பதுளையில் 16, மொனராகலையில் 11, காலியில் 20 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், அம்பாந்தோட்டையில் 12 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், மாத்தறையில் 17 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளும் அபாயமிக்க பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: