யாழ்ப்பாணத்தில் விபத்து : இராணுவத்தினர் 15 பேர் காயம்!

Monday, April 26th, 2021

யாழ்ப்பாணம்- உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவத்தினர் 15 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

கைதடிப் பக்கமிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் சேதமடைந்த கன்ரர் வாகனம்,இராணுவ முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts:

தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் மாற்று வழி - சுகாதார சேவைகள் துணைப் பணிப்பாளர் வைத்திய க...
இலங்கைக்கான நியூசிலாந்தின் வதிவிட உயர் ஸ்தானிகருக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சருக...
பிரதமர் இல்லத்திற்கு தீவைக்கப்பட்ட வேளையில் மின் துண்டிக்கப்பட்டது எப்படி? -விசாரணை ஆரம்பம் என பொத...