யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடி விசேட சுற்றிவளைப்பு – பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவிப்பு!
Saturday, December 9th, 2023யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு வன்முறையில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடமளிக்க முடியாது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். யாழில் அண்மைக்காலமாக வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம்: சட்ட ரீதியிலான அனுமதி!
தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள் மேலும் 15 நாட்களுக்கு நீடிப்பு - ஒமிக்ரான் பரவாது என்ற உத...
அடுத்தவாரமும் மூன்று நாட்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும் – வடக்கில் வாரம் 5 நாட்களும் கல்வி நடவடிக...
|
|