யாழ்ப்பாணத்தில் மத்தியதர குடும்பங்களின் நலன் கருதி வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பித்து வைப்பு!
Wednesday, November 18th, 2020
நாவற்குழி பகுதியில் மத்தியதர குடும்பங்களின் நலன்கருதி முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பநிகழ்வு வைபவம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
“சியபத்த வீடமைப்பு” எனும் கருப்பொருளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 100 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியாக இது அமையவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்நிட்டு குறித்த வீட்டுத்திட்டம் நாடு முழுவதும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு அதிபர் ஆசிரியர்களின் நிலுவைகள் ஜனவரியில் சீராகும் - வடக்கு கல்விச்செயலர் தெரிவிப்பு!
அபாயகரமானநிலையைகருத்திற்கொண்டுவீட்டில்இருந்து கற்றலை முன்னெடுங்கள் - மாணவர்களிடம் இலங்கைதமிழ்ஆசிரியர...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!
|
|
|


