யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம் தற்போதும் உள்ளது – போதனா வைத்திய சாலை பணிப்பாளர்!

Friday, April 10th, 2020

யாழ். மாவட்டத்தில் இன்னமும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அச்சம் நீங்கவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனால் வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொடர்ந்த பரிசோதணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர் யாழ்.போதனா வைத்தியசாலையும், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடமும் இணைந்து கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மருத்துவ ஆய்வுகூட பரிசோதனையை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன.

பலருடைய உறுதுணையில் மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனை பாதுகாப்பான முறையிலும் நம்பகரமானதுமாக நடாத்தப்படுகின்றது. குறிப்பாக இந்த பரிசோதனையில் பல கட்டங்கள் உள்ளது. ஒவ்வொரு கட்டமும் நேர்த்தியான முறையில் செய்யப்படுகின்றது.

வடபகுதியில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள உதவிபுரிகின்றவர்களுக்கு நன்றி கூறிக் கொள்ளுகின்றேன் என தெரிவித்த பணிப்பாளர் உடல் நலம் தொடர்பில் எவருக்கேனும் பிரச்சினைகள் அல்லது மாற்றங்கள் இருக்குமாகா இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவரை நாடவேண்டும். பிரதேச வைத்திய சாலைகள் அல்லது சிறிய வைத்திய சாலையில் உள்ள வைத்தியர்களினாலேயே போதனா வைத்திய சாலைக்கு நோய் சந்தேக நபர்களை அனுப்பிவைக்க முடியும்.

அத்துடன் கடந்த 5 நாட்களாக நடந்த பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த வைதியியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி இன்னமும் யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. அது அகலும்வரை சோதனைகளும் தொடரும் என தெரிவித்தார்.

Related posts:


விமர்ச்சிப்பதை விடுத்து உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் - ஓட்டமாவடி பிரதேச...
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி - வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்...
இலங்கைக்கு 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம் - ஜனவரி 10 ஆம் திகதி கிடைக...