யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் குறைவு:

Monday, April 18th, 2016

அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் குறைவாகவே இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டி.பி.டி.விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த பண்டிகைக் காலத்தில் இரண்டு குற்றச் சம்பவங்களே பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் காவல்துறையினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலை அளித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வந்த குற்றச்செயல்கள் மிக தீவிரமான முறையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் சில மாதங்களுக்கு முன்னர் அதிகரித்து இருந்தன. மாணவர்களும், சில இளைஞர்களும் குழுக்களாக செயற்பட்டு மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இதில் சிலர் படுகாயமடைந்து யாழ்ப்பாண போதனா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் காவல்துறை பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்நிலைய பொறுப்பதிகாரி டி.பி.டி.விஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

 

Related posts: