யாழ்ப்பாணத்திலுள்ள சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்யத்திட்டம்!
Monday, November 21st, 2016யாழ்.மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே உள்ள சுற்றுலா மையங்களை மேலும் அபிவிருத்தி செய்வதுடன் புதிய சுற்றுலா மையங்களை அடையாளம் கண்டு அவற்றையும் அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான நடவடிக்கைகளை சுற்றுலாத்துறை அமைச்சும் யாழ்.செயலகமும் இணைந்து ஆரம்பித்துள்ளன.
யாழ்குடாநாட்டுக்கு அண்மைக்காலமாகச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் இந்தப் புதியதிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் வேலணை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த செயற்றிட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவனாதனின் சிறப்புரிமையை அவமதித்த இராஜாங்க அமைச்சர் விஜயகல...
அரச கருமமொழிகள் தேர்ச்சி எழுத்துமூல பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது!
அனைத்து மாணவ ஒன்றியத்திற்கு தடை!
|
|