யாழ்ப்பாணத்திற்கு மருத்துவர்கள் வெளியிட்ட எச்சரிக்கை!

Monday, July 8th, 2019

யாழ் மாநகரசபையால் நிறுவப்பட்டுவரும் ஸ்மார்ட்செலூலர் கோபுரங்களின் செயற்பாட்டை விரைவுபடுத்தி 5ஜி தொழில்நுட்பம்பயன்படுத்தப்படுமாயின் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.நகரசபையால் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழிநுட்பசேவையை விரிவுபடுத்தும் நோக்கில் தனியார் நிறுவனம் ஒன்றினூடாக நவீன தொழிநுட்ப சேவையை வழங்கும் நோக்கில் 10 இற்கும் மேற்பட்ட தொலைத் தொடர்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

குறித்த நவீன தொழிநுட்பத்துடன் கூடிய கோபுரங்களில் தொழிநுட்பச் சேவை தொடர்பாக மாநகர சபை உறுப்பினர்களுக்கோ தெளிவான விளக்கம் அளிக்கப்படாமல் குறித்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

மாநகரத்தின்அபிவிருத்திக்கு தொழிநுட்ப சேவை அவசியமான நிலையில் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய தொழிநுட்பங்கள் பொருத்தப்படுமாயின் குறித்த சேவை தொடர்பில் மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி ஏற்படும்.

யாழ் மாநகரசபையால் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவையை நவீனப்படுத்த குறித்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்போது மக்களிடமோ சுகாதாரத்துறை மற்றும் சிவில் அமைப்புகளுக்கு குறித்த திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தப்படாமல் ஒப்பந்தம் சபையால் கைச்சாத்திடப்பட்டது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பிரதேசங்களில் குறித்த தொலைத்தொடர்புக் கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகின்றமையும் இதனூடாக குறித்த நிறுவனம் துணை நிறுவன சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் 5ஜி தொழிநுட்பத்தை பிரயோகிக்க நேரிடும்.

இவ்வாறு 5ஜி தொழில்நுட்பம் பிரயோகிக்கப்பட்டால் அதனூடாக வெளியேற்றப்படும் கதிர்வீச்சுக்கள் மனித மற்றும் விலங்குகளின் உடலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.

உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட பரிந்துரையில் உள்ள ஓர் தொழில்நுட்ப செயற்பாட்டை இலங்கையில் அதுவும் யாழில் பரிசோதனை செய்ய நினைப்பது எதிர்காலச் சந்ததியினரை அழிக்கும் செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: