யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பயணத்தை மறக்கமாட்டேன் – இந்திய பிரதமர் புகழாரம்!

Friday, May 27th, 2022

பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 11 திட்டங்களை அறிவிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இலங்கை எமது நெருங்கிய நண்பன். இலங்கையில் உள்ள தற்போதைய நிலை கவலை அளிப்பதாக இருக்கும். இந்தியா, இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் அளித்து வருகிறது. ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நெருங்கிய நண்பன் மற்றும் அண்டைய நாடு என்ற வகையில் இந்தியா சகல விதமான ஆதரவையும் வழங்கி வருவதாகவும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் என்பதில் பெருமையடைகின்றேன். கடந்த ஆண்டு நான் முதல் முதலாக யாழ்ப்பாணத்திற்கு சென்ற பயணத்தை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: