யாழில் 61 பேர் உட்பட வடக்கில் 95 பேருக்கு நேற்று கொவிட் தொற்று!

Thursday, June 17th, 2021

யாழ்.மாவட்டத்தில் 61 பேர் உட்பட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 95 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்.பல்கலைக் கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர், யாழ்.போதனா வைத்திய சாலையில் 05 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர் (நால்வரும் தொற்று அறிகுறிகளுடன் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காகச் சென்றவர்கள்) உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை யில் ஒருவர், என அடையாளர் காணப்பட்டுள்ளனர்.

Related posts: