யாழில் 39 மருத்துவர்களுக்கு நியமனம்!
Saturday, March 2nd, 2019மத்திய சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கமைய உள்ளகப் பயிற்சியினை நிறைவு செய்த 39 மருத்துவர்களுக்கு யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணியகத்தில் வைத்து நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு 5 மருத்துவர்கள் யாழ்.பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை ஆகிய ஆதார மருத்துவமனைகளுக்கும், கொடிகாமம், சங்கானை, புங்குடுதீவு, வேலணை, வரணி, வல்வெட்டித்துறை, கரவெட்டி, காரைநகர் ஆகிய பிரதேச மருத்துவமனைகளுக்கும், பண்ணை மருத்துவ நிலையம் ஆகிய இடங்களுக்கும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
இலங்கைக்கான கடன்தொகையை அதிகரித்தது ஆசிய அபிவிருத்தி வங்கி !
அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் - நிதி அமைச்சர் பசில் அறிவிப்பு!
இந்தியா - இலங்கை இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டுள்ள...
|
|