யாழில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது!

Wednesday, March 20th, 2019

10 கிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த இளைஞன் ஒருவனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞனை யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் வைத்து நேற்று (19) இரவு யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன், கஞ்சா பொதிகளை விற்பனைக்காக கொண்டு சென்ற போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்

Related posts:


புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படாதவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டனர் - இராணுவத் தளபதி!
இலங்கையும் அல்ஜீரியாவும் முதலாவது இருதரப்பு ஆலோசனை - சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தல் குறி...
எழுத்து மூலம் அறிவிக்கப்படுமாயின் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பய...