யாழில் கோர விபத்து – குடும்பஸ்தர் பலி!

Wednesday, January 2nd, 2019

மானிப்பாய் வீதி ஆறுகால் மடத்தடிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

ஆறுகால் மடம் புதுவீதியைச் சேர்ந்த திரவியம் வியஜராசா என்னும் குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவர்.

இவர் மானிப்பாய் வீதி ஆறுகால்மடப் பகுதியில் சிறு வியாபார நிலையம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.

வழமை போன்று இன்று காலையும் வீட்டில் இருந்து தனது வியாபார நிலையத்தை திறப்பதற்காக நடந்து சென்று வீதியைக் கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்து மானிப்பாய் நோக்கி மிக வேகமாக பயணித்த உந்துருளி அவர் மீது மோதியுள்ளது.

இதனால் வீதியில் இருந்து தூக்கி எறியப்பட்ட குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.காவல் நிலைய போக்குவரத்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: