யானை – மனித மோதலை கட்டுப்படுத்த தேசிய கொள்கை தயாரிப்பு – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடவடிக்கை!

Wednesday, July 5th, 2023

யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்காக, தேசிய கொள்கையை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நேற்று நடைபெற்ற செயலமர்வில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், யானை-மனித மோதல் தொடர்பான ஜனாதிபதி செயலணி, நீர்ப்பாசனத் திணைக்களம், தொடருந்து திணைக்களம, விவசாய திணைக்களம் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் உட்பட அனைத்து தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த செயலமர்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வரலாற்றில் இதுபோன்றதொரு கொள்கை தயாரிக்கப்படாமையால், யானை ௲ மனித மோதல் தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அதற்காக, கொள்கை ரீதியான தீர்மானம் அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: