மேலும் 6 மில்லியன் ‘ஸ்புட்னிக் V’ தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி!
Tuesday, April 6th, 2021
கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 மில்லியன் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை குழுவின் பரிந்துரைக்கமைய 7 மில்லியன் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை, ஒரு தடுப்பூசி 9.95 அமெரிக்க டொலர்கள் வீதம் 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்காக 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் குறித்த தடுப்பூசியின் அளவுக்கு மேலதிகமாக 6 மில்லியன் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காகவும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இன்று பொறுப்பேற்பு!
தாதிமாரின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜித சேனாரட்ன!
மீண்டும் சிக்குன்குனியா நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை!
|
|
|


