யாழ்.மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இன்று பொறுப்பேற்பு!
Thursday, May 26th, 2016யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன இன்று (26) காலை 10.00 மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இன்றையதினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதைகளுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வின் பின்னர் பௌத்த, இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மத வழிபாடுகள் நடைபெற்றன. அதன் பின்னர் பதிவேட்டில் கையொப்பமிட்டு தனது கடமைகளை புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பொலிஸ்மா அதிபர் சட்டம் மற்றும் நீதிக்கு அமைவாக யாழில் நடைபெறும், குற்றச் செயல்களை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை நீதியின் வழியில் மேற்கொள்வேன் என்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மாத்தளை பொலிஸ் பிரிவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய இவர் யாழ்ப்பாணத்திற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபராக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் கடல் உணவுகளின் விலைஅதிகரிப்பு!
40 புதிய அரசியல் கட்சிகள் பதிவு - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !
இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்படும் போது அறவிடப்படும் கட்டணத்தை மின்சார பட்டியல் கட்டணத்...
|
|