மேற்கூரை சூரிய மின்சக்திக்கான கட்டணங்கள் அடுத்த வாரம் திருத்தப்படும் – மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Thursday, September 8th, 2022மேற்கூரை சூரியசக்திக்கான கட்டண விகிதத்தை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையே நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அடுத்த வாரத்திற்குள் புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.
குழுவினர் அதன் பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அடுத்த வாரத்திற்குள் புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் பொருளாதார காரணிகள், குறைந்த செலவில் உருவாக்கம், நிதி திறன் போன்றவற்றை அவர்கள் கருத்திற்க் கொள்வார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு - ஐரோப்பிய ஒன்றியம்!
மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிப்பு!
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அதிகளவிலான கவனம் செலுத்தியே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிக...
|
|