மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு – அஸ்வெசும நலன்புரி திட்டம் குறித்து சமூக நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!
Sunday, July 9th, 2023
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அதற்கான பதில்களை 20 நாட்களுக்குள் வழங்குமாறு மேன்முறையீட்டு சபைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்..
இதுவரை 08 இலட்சம் மேற்முறையீடுகளும் 10 ஆயிரத்திற்கும் இற்கும் அதிகமான எதிர்ப்புகளும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அஸ்வெசும தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகள் மீதான விசாரணைகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் குறித்து தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
2018 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ரயில்களில் மோதுண்டு 99 பேர் பலி!
உள்ளூராட்சிமன்றங்களை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்!
கொழும்பு கறுவா தோட்டம் பகுதியில் உள்ள கட்டடத்தில் பாரிய வெடிப்பு !
|
|
|
இலங்கை – இந்திய உறவானது பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்தது - இலங்த்தீவின் 73 ஆவது சுதந்திர தின வாழ்த...
உடலில் இனங் காணப்படாத புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாத...
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்காக மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு - கவனம் செலுத்...


