மூன்று மாதங்களில் 108 பில்லியன் வருமானம் – தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டு!
Friday, January 27th, 2023மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்ட மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 108 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் அதிக உற்பத்தி செலவை காரணம் காட்டி இலங்கை மின்சார சபை கட்டணங்களை கணிசமாக அதிகரித்தது.
கடந்த சில மாதங்களில் இலங்கை மின்சார சபை தனது வருவாயை கணிசமான அளவு அதிகரித்துள்ளமை புலனாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே நிதிப் பிரச்சினைகள் மற்றும் சபைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக மின்சார சபைக்கு தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாடசாலையைத் திறப்பேனே தவிர சிறைச்சாலையைத் திறக்கமாட்டேன் - ஜனாதிபதி!
யாழில் போதைக்கு அடிமையான 17 வயது மாணவன் - மறுவாழ்வுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு!
மலையக சிறுவர்களை பாதுகாக்க தொழில் சட்டத்தில் திருத்தத்தம் - இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக...
|
|